June 8, 2025
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடியாக ஆய்வு.

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடியாக ஆய்வு.

மதுரை:

மதுரையில், பொதுப்பணித்துறை சார்பாக ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
மேற்கொண்டார்கள்.

மதுரை மாநகரில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இக்கட்டுமான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், கோரிப்பாளைம் மேம்பால கட்டுமானப் பணிகளை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் ஆய்வு மேற்கொண்டார். கட்டுமானப் பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் நிறைவேற்றி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திட வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் , சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகர் , பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் மற்றும் கோட்டப்பொறியாளர் மோகனகாந்தி அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.