June 8, 2025
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கோமகன் அறக்கட்டளை நிறுவனரும், ஸ்ரீபெரும்புதூர் விசிக முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலருமான சி.கோ.தியாகராஜ் -மெர்சி டயானாஇவர்களின் இல்ல பிறந்தநாள் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான .தொல் திருமாவளவன் கலந்துகொண்டு முதல் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் தி.தமிழ் கோமகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் உரையாடிய தொல் திருமாவளவன் அவர்கள் வரும் ஜூன் 14 திருச்சியில் நடக்க இருக்கின்ற பேரணி குறித்து உரையாடினார் பேரணி மதச் சார்பின்மை பேரணியாகவும் வகுப்புதிருத்த சட்டத்திற்கு எதிராகவும் இருக்கும் மேலும் இக்கூட்டம் அகில இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலியை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்க வேண்டும் என உரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் விசிக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் மேனகா தேவி கோமகன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய ஊராட்சி முகாம் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.