
பெரியகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு திருமணம். எம்.பி, எம்.எல்.ஏ.பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியகுளம் மே.01
தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக 2 ஜோடிகளுக்கு திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க.தமிழ்ச்செல்வன் எம்பி மற்றும் பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சரவணக்குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினர்.
இதில் திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகரன், கார்த்திக், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜ்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, ஆய்வாளர் தனலட்சுமி, செயல்அலுவலர் சுந்தரி, நதியா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.