June 8, 2025
சின்னமனூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சின்னமனூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் முல்லைவனம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் விசேஷமாக திருப்பணி நடைபெற்று புதிதாக விக்கிரகங்கள் அமைக்கப்பட்டு ஆலயத்தில் ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ முனீஸ்வரர், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ சப்த கன்னிமார்கள் ஆகிய தெய்வங்கள் அமையப்பெற்ற இக்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவில் திருப்பணிதாரர் பாரத் குரூப் ஆப் கம்பெனி பால்வண்ணன் -ஈஸ்வரி, பாரத் – வர்ஷா மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.மங்கள வாத்திய முழங்க நான்காம் காலயாக சாலை பூஜை நடைபெற்று, மூலாலய விமான கோபுர கலசத்திற்கும் பரிவார தெய்வங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் மஹா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.