April 19, 2025
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது செயல்பாட்டிலுள்ள அரசு வளர்ச்சித் திட்டங்களை நேரில் பார்வையிட்டு, திட்டங்களின் செயலாக்க நிலையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் இன்று (04.04.2025) ஆய்வு செய்தார்.

அலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை தளத்துக்குச் சென்று ஆராய்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் தாமதமின்றி முழுமையாக நிறைவு பெற வேண்டும் என்றும், அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உறுதியான உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே, வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான உணவின் தரம் மற்றும் மையத்தின் அடிப்படை வசதிகள், தூய்மை, குடிநீர், கழிவறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்ட அவர், தேவையான மேம்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஊத்துமலை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பள்ளி வளாகத்தின் சுத்தம், குடிநீர், கழிவறை, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மாணவர்கள் கல்வியில் விருப்பம் செலுத்தும் சூழல் ஏற்பட வேண்டுமென்பதற்காக அனைத்து வசதிகளும் சீராக இருக்க வேண்டும் என்றும், பள்ளியின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சி நவநீதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு, கட்டுமானத்தின் தரம், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அதற்கு முந்தையதிலே, வீரகேரளம்புதூர் வட்டம், இராஜகோபாலப்பேரி கிராமம் அதிசயபுரத்தில் பட்டு வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் பட்டு வளர்ப்பு கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு, உள்ள இடம்சேமிப்பு வசதி, வளர்க்கப்படும் புழுக்கள், பயிற்சி அளிக்கப்படும் உழவர் குழுக்கள், மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி நிஷாந்தினி, ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராமசுப்பிரமணியன், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரி. உடனிருந்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர். ஏ.கே. கமல் கிஷோர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு திட்டமும் பொதுமக்களுக்குப் பயனளிக்க வேண்டும். அந்த நோக்கத்துடன் அரசுத் திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது, என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.