
திருமங்கலம் நகரில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் திறந்து வைத்தனர்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆதவன் அதியமான் ஏற்பாட்டில் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் விருதுநகர் எம்.பி . மாணிக்கம் தாகூர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும்
நீர் மோர் பதநீர் சர்பத் நுங்கு இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், ஒன்றியச் செயலாளர்கள் மதன்குமார் நாகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் விமல் சிவனேசன், திருமங்கலம் நகர் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சின்னச்சாமி, துணைச் செயலாளர் செல்வம், மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.