
பழனியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சம்பள பணத்தை வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பழனி அருகே சிவிகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் 100 நாள் வேலை திட்டத்தில் உரிய நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்காததை கண்டித்து பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில் குமார் மற்றும் சிவகிரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன..
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…