
சில்வார்பட்டியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சம்பள பணத்தை வழங்காத மத்திய அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பெரியகுளம்: மார்ச்: 30
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலை உறுதித்திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் தமிழன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஸ்டீபன், மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள்,100 நாள் வேலை திட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.