June 9, 2025
குடும்ப அட்டைதாரர் ரேகை பதிவு: மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., வேண்டுகோள்.

குடும்ப அட்டைதாரர் ரேகை பதிவு: மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., வேண்டுகோள்.

தென்காசி,மார்ச்.07:

தென்காசி மாவட்டத்தில் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் இடம் பெற அனைவரும் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப, தெரிவித்துள்ளார்‌.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் அனைத்து அந்தியோயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகையை ஒரு வாரகாலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வெளியிடங்களில் பணிபுரிவோர் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக்கடையில் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை எண்ணைக்கொண்டு கைவிரல் ரேகை பதிவுகள் மேற்க் கொள்ளலாம் எனக்கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.