
வாடிப்பட்டி அருகே தனியார் பள்ளியில் 50-வது பொன்விழா ஆண்டு விழா நடைபெற்றது.
வாடிப்பட்டி, மார்ச்.7.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, நீரேத்தான் வெங்கடாஜலபதி மெட்ரிகுலேஷன் பள்ளி50-வது பொன்விழா ஆண்டு விழா,கிருஷ்ணா மஹாலில் 2 நாட்கள் நடந்தது. இந்த விழாவிற்கு, தலைமை நிர்வாக அலுவலர் கிரிஜா தலைமை தாங்கினார்.

முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்றார். துணை முதல்வர் திவ்யா ஆண்டறிக்கை வாசித்தார். இந்த விழாவில் , மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராஜகோபால் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.