June 8, 2025
பெரியகுளத்தில் கைருன்னாஸ் நர்சரி & பிரைமரி பள்ளியின் 34-ம் ஆண்டு விழா

பெரியகுளத்தில் கைருன்னாஸ் நர்சரி & பிரைமரி பள்ளியின் 34-ம் ஆண்டு விழா

தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் கைருன்னாஸ் நர்சரி & பிரைமரி பள்ளியின் 34 -ம் ஆண்டு கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்ச்செம்மல், புலவர் மு. இராஜரத்தினம், தங்கபாலன், நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன்,வடகரை நூலக வாசகர் வட்டத்தலைவர் மணிகார்த்திக், ரபிக்,விசிக நாகரத்தினம், அகமது இஸ்மாயில், ராஜ்குமார், சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.

பள்ளியின் நிறுவனர் பிஏஏ. முகமது இலியாஸ், பள்ளி முதல்வர், செயலாளர், ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றனர்.

இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் நடனம், பேச்சு, பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பெற்றோர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை உற்சாகப்படுத்தினர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.