
நிலக்கோட்டையில் 1920 இல் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த துண்டு பிரசுரம் விநியோகம்
நிலக்கோட்டை, பிப்.20- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக வருகிற ஏப்ரல் மாதம் 3ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பெருங்காமநல்லூர் கைரேகை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேய அரசின் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த நிலக்கோட்டை பகுதியில் இருந்து செல்வதற்காக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் துண்டு பிரசுரம் விநியோகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் இளங்கோ நிலக்கோட்டை பகுதியில் உள்ள பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்புச் செயலாளர் முருகன், மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் வக்கீல் மாயாண்டி, ராஜேந்திரன், தேனி மாவட்டம் கூட்டமைப்பு தலைவர் முருகன், கூட்டமைப்புச் செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.