June 9, 2025
ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட மாசிகளரி விழா

ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட மாசிகளரி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை வ.கம்மாளபட்டிகிராமத்தில் அமைந்திருக்கும் பெருசு பட்டி வகையறாவுற்கு பாத்தியப்பட்டஸ்ரீ அழகு நாச்சியம்மன் ஸ்ரீ பாரி கருப்புசாமி ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ ஆண்டிச்சாமி ஸ்ரீ சின்ன கருப்புசாமி ஸ்ரீ மதலை கருப்புசாமி ஸ்ரீ மலையாள வீரன் ஸ்ரீ முத்து கருப்பு ஸ்ரீ அக்னி வீரன் ஸ்ரீ பட்ட சாமி ஆகிய 21 தெய்வங்களின் மாசி கிளறி விழா கடந்த 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நாயக்கர் தோப்பில் இருந்து இரவு வான வேடிக்கை மேளதாளம் முழங்க சாமியார்களை கோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்று கிராமம் மரியாதைக்காரர்கள் கோவிலுக்கு முதல் நாள் சாமியாட்டம் ஆடி தொடர்ந்து மூன்றாம் நாள் சாமி ஆட்டம் நான்காம் நாள் அதே போன்று ஐந்தாம் நாள் ஆறாவது நாள் ஏழாம் நாள் சாமியார்களுக்கு தண்ணீர் எடுத்து வந்து இரவு பயிறு அவித்தல் மகாசிவராத்திரி கோவில் வீட்டில் பங்காளிகள் அனைவரும் இரவு தங்கிய அதிகாலையில் மஞ்சள் தட்டுதல் சலுகை பரப்பில் சாமி கும்பிடுதல் எட்டாம் நாள் காலையில் வாழைப்பழம் பச்சரிசி பயிர் தேங்காய் வழங்குதல் 12 மணிக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் இரவு 12 மணிக்கு வழிபாடு செய்தல் தொடர்ந்து| அதிகாலை கோட்டை கட்டுதல் 11 மணிக்கு மார்க் பெருசு பட்டி வகையறா மற்றும் கிராம பொதுமக்கள் வலசை அலங்காநல்லூர் மங்கலக்குடி பொய்கைகரைப்பட்டி கெங்க முத்தூர் மற்றும் 40 வீட்டு பங்காளிகள் அழகாபுரி ஆகியோர் செய்து இருந்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர் நிர்வாகியும் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாமி கும்பிடும் விழாவாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.