June 9, 2025
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பெருங்காமநல்லூர் வீர தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த 25 வாகனங்களை செல்ல தீர்மானம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பெருங்காமநல்லூர் வீர தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த 25 வாகனங்களை செல்ல தீர்மானம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் முருகன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது:-
இந்தியாவில் கைரேகை சட்டத்தை எதிர்த்து பெருங்காமநல்லூரில் பிரமலைக் கள்ளர்கள் துப்பாக்கி சூட்டில் தன் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் வீர அஞ்சலி செலுத்து 3.4. 2025அன்று நிலக்கோட்டையில் இருந்து 25 வாகனங்களில் சொல்வது எனத் தீர்மானமும், 04.04.2025 அன்று நிலக்கோட்டையில் கல்வித் தந்தை ஐயா பி.கே.தேவரின் பிறந்தநாள் விழா கொண்டாடுதல், தமிழர்களின் உயிர் மூச்சான தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தை கொண்டாடும் விதமாக பிரமலைக்கள்ளர் மகளீர் அணியில் உள்ள தேவர் ஜெயந்தி விழா சிறப்பு திட்டத்தில் இணைந்துள்ள மகளிர்களுக்கு பரிசு வழங்குதல்,பிரமலைக்கள்ளர்கள் உட்பட 68 சமுதாயத்திற்கு வழங்கக்கூடிய டி.என். டி. என்ற ஒரே சாதி என சான்றிதழ் தமிழக அரசை வழங்க வலியுறுத்துதல்,தமிழக அரசு மதுரை கள்ளர் சீரமைப்பு துறைக்கு தலைவர் மற்றும் இயக்குனர்கள் நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி தாலுகா, பெருங்காமநல்லூர் கைரேகை சட்ட எதிர்த்து உயிர் நீத்த நம் முன்னோர்களின் நினைவு தூள் மண்டப புனித பூமியில் ஒன்று திரண்டு உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோ, ஒன்றிய பொறுப்பாளர்கள் விக்னேஷ், சிவமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.