
உயிருடன் இருந்த நபரை இறந்ததாக கூறி போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரித்த திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி காந்தி மைதானம் வீதி பகுதியை சார்ந்த திமுக தேனி மாவட்ட முன்னாள் பொருளாளர் அருணாசேகர் என்பவர் அவரது சித்தப்பா கரியம்பிள்ளை என்பவரது மகன் ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மனைவி காமேஷ்வரி என்பவரது பெயரில் உள்ள தேவதானப்பட்டி பிட் 1 கிராமம் புல எண் 1888 / A ல் கட்டுப்பட்ட 2 1/4 செண்ட் அளவிலான இடத்தினை அபகரிக்கும் நோக்கில், சொத்தின் உரிமையாளருக்கு பின் வாரிசுகள் இல்லாத காரணத்தினால் மேற்கண்ட சொத்தை அபகரிக்கும் விதமாக காமேஷ்வரி 14.1.1996 ல் இறந்ததாகவும், அவரது கணவர் ராஜேந்திரன் 21.12.1996 ல் இறந்ததாகவும் காரணம் காட்டி பொய்யான ஆவணங்கள் தயார் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி வந்துள்ளார்.
மேற்படி, சொத்தினை காமேஷ்வரி என்பவர் தேவதானப்பட்டி கிராமம் நாடார் தெரு பகுதியில் வசித்து வரும் ராஜமலை நாடார் மகன் சக்திவேல் என்பவருக்கு மேற்படி சொத்தின் பவர் ஏஜென்ட், (பெரியகுளம் இணை 2 சார்பதிவாளர் அலுவலகம், பொது அதிகார பத்திரம் ஆவண எண் 74/1998 ன் கீழ் ) செண்பகம் பிள்ளை மற்றும் காமேஷ்வரி ஆகியோர், வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண் 1491 /1998 ன் கீழ் கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சொத்தின் உரிமையாளர் காமேஷ்வரி கடந்த 9.6.2012ல் காலம் சென்று விட்டார். காமேஷ்வரி கடந்த 14.1. 1996 ல் இறந்து விட்டதாக பொய்யான ஆவணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும் மேற்கொண்ட சொத்தை அபகரிக்க முற்பட்டு வரும் திமுக பிரமுகர் அருணா சேகர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சக்திவேல் என்பவரது மகன் கார்த்திகைராஜா தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீசார் திமுக பிரமுகர் சேகர் என்ற அருணாசேகர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.