
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மத பிரச்சனையை தூண்டி விட்டதா திமுக.!?
சிக்கந்தர் தர்கா மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ளது. பாண்டிய நெடுஞ்செழியன் மன்னர் மதுரையை ஆட்சி செய்த வந்தபோது, அரபு தேசத்தை சேர்ந்த சுல்தான் மன்னர்கள் பாண்டிய நெடுஞ்செழியன் மன்னருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் வந்தவர்கள். அதில் ஒருவரான சுல்தான் மன்னர் சிக்கந்தர் என்பவருக்கும் , பாண்டிய நெடுஞ்செழியன் மன்னருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாண்டிய மன்னனுடைய ஆட்கள் சிக்கந்தர் என்பவரை மலை உச்சிக்கு கொண்டு சென்று கொன்று அங்கேயே புதைத்து விடுகின்றனர். அது பிற்காலத்தில் தர்காவானது என தகவல்கள் கூறப்படுகிறது.
இத்தனை ஆண்டுகளாக சிக்கந்தர் தர்கா திருப்பரங்குன்றம் மலைமீது இருந்த இடம் தெரியாமல் அமைதியாக இருந்து வந்தது. முருகனையும் , தர்காவையும் பொதுமக்கள் அவரவர் வழிபாடுகளை ஒற்றுமையாக செய்து வந்தனர். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது பல்வேறு பிரச்சனைகள் எழுவதற்கு காரணம் என்ன.? கடந்த காலங்களில் அதிமுக ஆட்சி செய்த போதும் , அதன் பிறகு அதிமுக தலைமை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சி செய்த போதும் அமைதியாக இருந்த மதுரை திருப்பரங்குன்றம் மலை, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இப்போது பேசு பொருளானது எப்படி.? இந்த விவகாரத்தை தூண்டி விட்டு குளிர் காய்வது யார்.? இப்படி பல்வேறு கேள்விகள் பலரிடம் எழுந்துள்ளது.
திமுக கூட்டணியிலுள்ள முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில், நவாஸ்கனி வருவதற்கு முன்பு விழா தொடங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அமைச்சர் கண்ணப்பன் , இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு தாமதமாக வந்த நவாஸ்கனி, தான் வருவதற்கு முன்பே விழா தொடங்கப்பட்டதை பார்த்து கோபமடைந்து மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்ட சம்பவமும்,அதே மேடையில் அமைச்சர் கண்ணப்பனை தாக்க முற்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்த விசயத்தை திமுக தலைமை கண்டுக்காமல் விட்டுவிட்டது.
நவாஸ்கனி எப்போதும் அடாவடி வேலையில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளன. அதற்கான மாவட்ட ஆட்சியர் , அமைச்சர் என பாராமல் இப்படி அடாவடி செய்வதா என அப்போது பேசப்பட்டது. தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளான மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் மலையில் உள்ள முருகன் கோயில் , சிக்கந்தர் தர்கா என இரண்டு மதத்தை சேர்ந்த மக்களும் இதுநாள் வரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வழிபாடு செய்து வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அசைவம் சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து பகிர்ந்ததே இத்தனை பிரச்சனைக்கும் காரணம். இந்த விசயத்தை தெரிந்த அமைச்சர் சேகர்பாபு வேறு சிலரை காரணம் காட்டி மதக்கலவரம் ஏற்படுவதாக கூறுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது இந்த விவகாரத்தை தூண்டி விட்டதற்கு காரணம் என்ன.? ஆட்சி அதிகாரத்திற்காக தற்போது திமுக, கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை வைத்து மதக்கலவரத்தை கட்டவிழ்த்து விட பார்க்கிறதா.? இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரியர் ஏனஜென்ஸி நடத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனிக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் என்பவர் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
அதே கொரியர் ஏஜென்ஸியை சென்னையில் நடத்தி வரும் திமுக கட்சியின் முக்கிய பிரமுகருக்கும் ஜாபர் சாதிக் நெருக்கமானவர். சென்னையில் உள்ள திமுக பிரமுகரும் , ஜாபர் சாதிக் இருவரும் கூட்டு சேர்ந்து தான் போதைப்பொருள் கடத்தி வந்தனர். போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை விரிவான விசாரணை செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும். சாதி , மதம் பார்க்காமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த திமுக அரசு மறைமுகமாக திட்டமிடுகிறதா.?
சிறுபான்மை மக்களின் வாக்குகளை மட்டுமே குறிக்கோளாக வைத்து ஆட்சியை பிடித்த திமுக. இப்போது அதே சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதப்பிரச்சனையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மத வழிபாட்டு விசயத்தில் ஆட்சியிலுள்ள திமுக அரசு தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்படாமல் தடுத்து இருக்கலாம். ஆனால் காவல்துறையை வைத்து தமிழக அரசியலையே தள்ளாட விட்டது. இதுபோன்ற மதரீதியான பிரச்சனைகளை கட்டவிழ்த்து பொதுமக்களிடையே உள்ள அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுபோன்ற அராஜக போக்குகள் இல்லாமல் அவரவர் வழிபாட்டை வழிபடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கை.