June 9, 2025
பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்பம் குறித்து கண்காட்சியை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா துவக்கி வைத்தார்.

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்பம் குறித்து கண்காட்சியை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே நெய்க்காரப்பட்டி உள்ள பி ஆர் ஜி தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஆயிரம் வகையான உணவு வகைகள் நூறு வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பால் வகைகள் பசுமை குடில் மணல் பேட்டரி வேளாண் உயிரித் தொழில்நுட்பம் தேனீக்கள் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல் நிலநடுக்கத்தால் பாதிப்படையாக கட்டிடங்கள் கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

பள்ளி தாளாளர் ரஞ்சிதம் ராமச்சந்திரன் செயலாளர் கிரிநாத் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.