
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு 9 லட்சம் நிதி உதவி வழங்கிய பின்பு உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கைலாசம் வளர்மதி தம்பதியின் மகன் சக்தி சோமையா நேற்று பள்ளியில் கம்ப்யூட்டர் வயரை மின்சார இணைப்பில் வயரை மாட்டும் பொழுது மின்சாரம் தாக்கியது உடனடியாக மாணவனை ஆசிரியர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவனின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது இந்நிலையில் நேற்று இரவு அவரது உறவினர்கள் மூன்று கோரிக்கைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் மாணவர்களின் இறப்புக்கு காரணமான பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், மாணவன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மாணவனின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாய் அறிவித்திருந்தார்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர் பாண்டி முருகன் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து உத்தரவு பிறப்பித்தார் ஆசிரியர்கள் மீது சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் அறிவித்த உதவித்தொகை போதுமானதாக இல்லை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயசாவில் இறந்தவர்களுக்கு பத்து லட்சம் மாணவர்களின் இறப்புக்கு 5 லட்சமா என்று கேள்வி எழுப்பி காலையில் காரைக்குடி வட்டாட்சியர் மற்றும் காரைக்குடி டிஎஸ்பியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியரிடம் உரிய நிவாரணங்களை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் ஆகியோர் மாணவரின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்பட்ட ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் சொந்த பணத்தில் இருந்து இரண்டு லட்ச ரூபாயும் அதுபோல் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ராமசாமி அவர்களின் அறக்கட்டளையிலிருந்து இரண்டு லட்ச ரூபாயும் மொத்தம் ஒன்பது லட்சம் ரூபாய் மாணவரின் உறவினர்களிடம் வழங்கினர். இறந்த மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக உறுதியளித்தனர் அதன் பின்பு மாணவனின் உடலை அவரது உறவினர்கள் வாங்கிச் செல்ல ஒத்துக்கொண்டனர்.
மாணவனின் உடல் கூறுவாய்வு முடிந்து வெளியே வந்த மாணவனின் உடலுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் மாணவர்களுடன் அவர் சொந்த ஊரான பத்தரசர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.