
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை அமைச்சர் பி மூர்த்தி ஆய்வு செய்தார்
சோழவந்தான் ஜன 10
மதுரை மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 16 வரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கான பணிகள் கடந்தமூன்றாம் தேதி துவங்கப்பட்ட நிலையில் தற்போது முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
உலகப் புகழ்பெற்ற பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைபொறுத்த ஜனவரி 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக தற்போது வாடிவாசல் புதுப்பிக்கும் பணி, பார்வையாளர் மாடம் ஜல்லிக்கட்டின் போது பார்வையாளர்கள் மைதானத்திற்குள் வராமல் தடுக்கும் வகையில் இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் அதே போன்று வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும்.
ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து செல்லும் வகையில் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டடுக்கு தடுப்புகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்
இப்பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்
அமைச்சர் மூர்த்தி வாடிவாசல் முதல் காளைகள் சேகரிப்பு பகுதி வரை நடந்து சென்று இரண்டடுக்கு தடுப்பு வேலிகளின் உறுதி தன்மைகுறித்து அசைத்து பார்த்து உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்தார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பதால் பாதுகாப்பு பணிகள் குறித்து கூடுதல் ஆலோசனை வழங்கினார்
தற்போது முன்னேற்பாடு பணிகளும் தீவிரமடைந்துள்ளதால் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களும் மற்றும் வீரர்களும் தீவிர பயிற்சி ஈடுபட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதி விறுவிறுப்பாக காணப்படுகிறது