
மீனவ கிரமத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.
காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பிள்ளையார் கோயில் தெரு விரிவாக்கத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் நாக.தியாகராஜன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21 இலட்சம் 14 ஆயிரம் 560 செலவில் அமைப்பதற்கான பணியினை இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களும், பொறியாளர்களும், ஊர் கிராம பஞ்சாயத்தார்களும் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.