
இலவச வேட்டி வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.
வருகின்ற தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் த வெள்ளையன் அறக்கட்டளை சார்பில் மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கௌரவிக்கும் விதமாக வேட்டி சட்டைகள் வழங்கும் விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வாய்ஸ் அறக்கட்டையில் நிறுவன தலைவர் முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வேட்டி சட்டைகளை வழங்கினார்.