
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் 22 ம் ஆண்டு விழா
சோழவந்தான் ஜன 6
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பாக பேரமைப்பு தொடங்கி 22 ஆண்டுகள் மக்களுக்கான சேவைகளை தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து தொடந்து செய்து வந்த நுகர்வோர் பொறுப்புகளும் கடமைகளும் குறித்து விழிப்புணர்வு முகாம் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை மாநில தலைவர் டாக்டர் செ பால்பர்ணபாஸ் வரவேற்புரை சி.தமிழ்செல்வன் முன்னிலை முனைவர் சதீஷ்குமார் நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை. முனைவர் பெருமாள் ஜி உலகத்தமிழ் பல்கலைக்கழகம் இந்திய ஒருங்கிணைப்பாளர் சிறப்பு விருந்தினர் நீதியரசர் கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றம் மேனாள் நீதிபதி இணையதள குற்றங்கள் குறித்து துண்டுப்பிரசுரங்கள் வெளியீடு சிறப்புரை திருமதி காவியா சென்னை பெருநகர சைபர் க்ரைம் காவல்துறையின் துணை ஆணையர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஸ்ரீதரன் உதவி செயலாளர் மாநில போக்குவரத்து ஆணையம் உணவு பாதுகாப்பு குறித்து நியமன அலுவலர் மருத்துவர் ஜெகதீஷ் சந்திரபோஸ் வாழ்த்துரை கவிஞர் முனைவர் அனிதா கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசின் விருது பெற்ற முதன்மை எழுத்தாளர்
விமலேஷ்வரன் சென்னை பிரஸ் கிளப் பொதுச்செயலாளர் மருத்துவர் கனகசபை முன்னாள் முதல்வர் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனை மருத்துவக்கல்லூரி
விஜயகுமார் இந்திய நுகர்வோர் கூட்டமை தலைவர் நன்றியுரை விஜயகுமார் மாநில தலைவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மற்றும் அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான செயல் செம்மல் விருது சென்னை உயர்நீதிமன்றம் மேனாள் நீதிபதி கிருஷ்ணன் அவர்கள் வழங்கினார் மாவட்ட செயலாளர் கூ.ரமேஷ் மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் ஜெய தமிழ்செல்வி துணை தலைவர் மு ஜெகதீசன் தே.கல்லுபட்டி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.