
இதுதான் சமூகநீதியா?
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கேரம் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாடு திரும்பிய காசிமாவுக்கு அரசின் சார்பாகக் கிடைத்தவை வெறும் வாயளவில் பாராட்டும் வாழ்த்துகளும்…
“வாழ்த்துகள் மகளே, எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியுள்ளது”
காசிமாவுக்கு வெறும் வாழ்த்தும் பாராட்டும். ஆனால் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ஐந்து கோடி பரிசு.. காசிமா புறக்கணிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? முஸ்லிம் என்பதுதான் காரணமா? அல்லது எளிய குடும்பத்தில் பிறந்த ஏழை என்பதுதான் காரணமா? சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன் பெற்ற குகேஷுக்குத் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகை தரக்கூடாது என்று சொல்லவில்லை. தாராளமாகத் தாருங்கள். அதே போல் உலகக் கேரம் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை காசிமாவுக்கும் உரிய ஏற்பிசைவு(அங்கீகாரம்) தமிழக அரசால் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?
ஏன் தரப்படவில்லை?
ஏன் இந்த வேறுபாடு?
இதுதான் சமூகநீதியா?
இதுதான் திராவிட மாடலா?
நமது நிருபர்