April 17, 2026
பழனி: "ஆட்சிக்கு வந்ததும் கொய்யா பழச்சாறு ஆலை" - அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் அதிரடி வாக்குறுதி!

பழனி: "ஆட்சிக்கு வந்ததும் கொய்யா பழச்சாறு ஆலை" - அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் அதிரடி வாக்குறுதி!

பழனி | ஏப்ரல் 05, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பழனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிமனோகரன், தனது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் களம்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பழனி தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே பலமுனைப் போட்டி நிலவுகிறது.

கொய்யா சந்தையில் தீவிர பிரச்சாரம்:

இன்று அதிகாலை முதலே அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன், ஆயக்குடி பகுதியில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆயக்குடி பேரூர் செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்குச் சேகரிப்பின் போது, புகழ்பெற்ற ஆயக்குடி கொய்யா சந்தைப் பகுதிக்குச் சென்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்தார்.

முக்கிய வாக்குறுதி:

பிரச்சாரத்தின் போது விவசாயிகள் மத்தியில் பேசிய ரவிமனோகரன்:

“ஆயக்குடி பகுதி கொய்யா சாகுபடிக்கு உலகப் புகழ்பெற்றது. ஆனால், இங்குள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஆலை இதுவரை அமைக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன், இந்தப் பகுதியில் கொய்யா பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உறுதி அளித்தார்.

கூட்டணி பலம்:

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரவிமனோகரனின் ஆதரவாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர்.

தொகுதி முழுவதும் வேட்பாளர்களின் வருகையால் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *