
திரைப்பட நடிகை மூலம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் அன்பாடும் முன்றில் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வாழை திரைப்பட நடிகை திருமதி பிரியா மனோகரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரேஸ் டிவி குழுமங்களின் இயக்குனர் திரு நெல்லை டேவிட் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தார் நிகழ்ச்சியில் பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானால் என்ற புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






