March 2, 2026
முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது

முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது

ஆக, 15
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் தேசியத் தலைவர் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, பெருமிதத்துடன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
மதிப்புக்குரிய சோபா ரங்கநாதன் அவர்கள் தலைமையில், காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனந்தகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டாரத் தலைவர் ராமர், புவனேஸ்வரன், சுரேஷ், காந்தி நகரத் தலைவர் சாகுல் ஹமீது, சஞ்சய் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பல்வேறு பிரிவு தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் தேசியக் கொடி சிறப்பாக ஏற்றப்பட்டு, தேசபக்திப் பாடல்கள் ஒலிக்க, அனைவரின் உள்ளத்திலும் தேசப் பெருமை பெருகியது. நிகழ்வின் நிறைவாக இனிப்பு வழங்கப்பட்டு, அனைவரும் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் மூலம், சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களின் தியாகம் நினைவுகூரப்பட்டதோடு, மக்கள் ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *