
பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் மாவட்ட செயலாளர் ஜோதி சண்முகம் தலைமையேற்று விழாவினை நடத்தினார்.
இதில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் மாநில தலைவர் ரமேஷ் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் / உறுப்பினர்கள் /மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.






