
போதைப் பொருள் விழிப்புணர்வு
மதுரை.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் இன்று(11.08.2025) நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக மதுரை மாவட்டம், அமெரிக்கன் கல்லூரியில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், காவல்துறை
துணைத் தலைவர்(மதுரை சரகம்) முனைவர் அபினவ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர அரவிந்த் , மாநகராட்சி துணை மேயர் துணை மேயர் தி.நாகராஜன்
உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ,மாணவிகள், தன்னார்வலர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.






