June 30, 2025
அரசு சலுகைகளை பயன்படுத்தி திருந்துவார்களா திருநங்கைகள்?

அரசு சலுகைகளை பயன்படுத்தி திருந்துவார்களா திருநங்கைகள்?

என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.!

நமது நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, அரசின் சார்பில் அவர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்பட்டும் பல்வேறு வாழ்வாதார பொருளாதார முன்னேற்றத்திற்கான பேருதவிகளையும் செய்து வருகின்ற நிலையில், குறிப்பாக திருநங்கையர்களை பொருளாதார ரீதியாக மேம்பட, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வீடுகள், இலவச தையல் இயந்திரம், உயர்கல்வி பயில உதவி, சுய உதவி குழுக்கள், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, இலவச திறன் பயிற்சி, வருமானத்தை ஈட்டும் தொழில் செய்திட ரூ.50,000/- வரை மானியம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.மளிகைக் கடைகள், கறவை மாடுகளை வளர்ப்பது, சிற்றுண்டிச்சாலை, சோப்பு, நாப்கின்கள், பால் பொருட்கள் உற்பத்தி அலகுகள், பயணிக்கும் ஆட்டோக்கள், சுமை ஆட்டோக்கள் மற்றும் துணி, தென்னை நார், அரிசி போன்ற வணிக நடவடிக்கைகள் போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்தி எண்ணற்ற திருநங்கைகள் அரசு பணிகளிலும் முக்கிய பொறுப்புகளிலும் முன்னேறி உயர் நிலைக்கு சென்றுள்ளார்கள். அவர்களை பார்த்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். ஆனால் மயிலாடுதுறை உட்பட பல்வேறு நகரங்களில் திருநங்கைகளில் சிலர் இரவு நேரங்களில் சாலையில் நின்று கொண்டு தவறான பாதைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வது, ரயில் மற்றும் கடைவீதிகளில் கட்டாய வசூல் வேட்டையில் இறங்குவது, மது அருந்திவிட்டு அநாகரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது, முகம் சுளிக்கும் வகையில் ஆடைகளை அணிந்து கொள்வது, பேசுவது என்பதை பொது இடங்களில் பார்த்து மிகவும் வேதனை ஏற்படுகிறது.

அரசு கொடுக்கும் பல்வேறு சலுகைகளை நல்வழியில் பயன்படுத்தி வாழ்வில் மற்றவர்களைப் போல முன்னேறி தாங்களும் சமூகத்தில் மதிக்கப்படுகின்றவர்களாக மாறவேண்டும் என்று அனைத்து திருநங்கைகளும் சபதமேற்க வேண்டும். அதற்காக ஏற்றம் பெற்ற திருநங்கைகள், தங்களைப் போன்று மாறிட, தவறான வழிகளில் செல்லும் திருநங்கைகளை இனம் கண்டு அறிவுரைகள் கூறி திருத்திட முற்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது சமூகத்தில் குற்றங்கள் மற்றும் கலாச்சார சீர்கேடுகள் குறையும் என்பது உறுதி. ஆகவே அரசின் சலுகைகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி திருந்துவார்களா திருநங்கைகள் என்று சமூகம் எதிர்பார்க்கின்றது என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.