June 28, 2025
ஆசிரியர் பற்றாக்குறை உடனடியாக நிரப்ப கோரிக்கை.

ஆசிரியர் பற்றாக்குறை உடனடியாக நிரப்ப கோரிக்கை.

உசிலம்பட்டி.

மதுரை,
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி. அய்யப்பன் , அரசு முதன்மைச் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சந்தித்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப பள்ளிக் கல்வித் துறையால் நடத்தும் பள்ளிகளில் கல்வி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 23 கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் இதுவரை அரசு பணியிடம் நிரப்பவோ அல்லது கல்வி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனவே, பள்ளிக் கல்வித்
துறை மூலம் கல்வி மேலாண்மை குழு ஆசிரியர் பற்றாக்குறை உடனடியாக நிரப்பி கள்ளர் சீரமைப்பு துறையிலும் கல்வி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர் பணியிடங்களை
நிரப்பி தொகுப்பூதியங்கள் வழங்க வேண்டும் என்றும் , மேலும், பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9 பணியிடங்களுக்கு பதிலாக 5 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, 9 பணியிடங்களையும் முழுமையாக நிரப்பி விட வேண்டும் என்று , கேட்டுக்கொண்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.