
கமுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கமுதி ஜூன் :10
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கமுதியில் தேவர் திருமண மண்டலத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பானிமுருகேசன் தலைமையில் தேசிய செயலாளர் திண்டுக்கல் பி.எஸ் ஜெயராமன், தேசிய செயலாளர் மாநில பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ்தேவர், முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டத்தில் கட்சியை பலபடுத்தும் வகையில் கிளை, நகர, ஒன்றியம் வாரியாக புதிய மாவட்ட கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது அதனடிப்படையில் ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது .
கட்சியின் வளர்ச்சி நலன் கருதி இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளராக தரைக்குடி கே.ஆர் லட்சுமணன், மாவட்ட தலைவராக சுரேஷ்தேவர் மாவட்ட துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடாசலம், மாவட்ட துணைச் செயலாளர் கே. முருகன்,மாவட்ட துணைத் செயலாளர் சபரி ரத்தினேஷ்வரன் ,மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சுபஸ்ரீ மணி ஆகியோரை புதிய மாவட்ட நிர்வாகிகளாக அறிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் எம். கொம்பையா பாண்டியன், டி.யு.சி.சி.மத்திய குழு உறுப்பினர் தேளி காளிமுத்து, ஆலடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தி.கோபித்தேவர், டி.யு.சி.சி.மாநிலச் செயலாளர் அழகுமலை, தேனி மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.சக்கரவர்த்தி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆழிக்குடி மாரிபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் செண்பகராஜ், நெல்லை மாவட்ட தலைவர் மணித்தேவர், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சில்வர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக கமுதி பேருந்து நிலையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றார்கள்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள் புதிய மாவட்ட பொதுச் செயலாளர் தரைக்குடி கே.ஆர்.லட்சுமணன் நன்றி கூறினார்.