
பெரியகுளத்தில் விசிக முன்னாள் நிர்வாகி இல்ல திருமண விழா
பெரியகுளம், ஜூன். 9
தேனி விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம்-நாகஜோதி தம்பதியின் மகன் நாகஅர்ஜூன். இவருக்கும், சருத்துப்பட்டியை சேர்ந்த முருகராஜ்-கவிதா தம்பதியின் மகள் தெய்வகனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இவர்களது திருமண விழா நடந்தது.
இந்த விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜோதி முருகன், மாவட்ட அமைப்பாளர் தொல்.தளபதி, தொகுதி துணை செயலாளர் ஆண்டவர் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ், திரவியம் கல்வி குழும தலைவர் டாக்டர்.பாண்டியராஜன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழ்வாணன் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.