June 7, 2025
சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பழுதான மின்கம்பம்.

சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பழுதான மின்கம்பம்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் நீதிமன்ற வளாகத்தின் அருகில் காளியம்மன் கோவில் வாசலில், சாலையை இரண்டாக்கி அதாவது சாலையின் நடுவில் மின்கம்பம் அமைத்தது போல் உள்ளது.

இந்த பழுதான மின்கம்பம் அகற்றாமல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது .கடலாடியிருந்து மறவர் கரிசல்குளம் செல்லும் சாலை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சாலையாக உள்ளது.

உள்ளூர் வாசிகள், பக்கத்து கிராம மக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி தினசரி இச்சாலையில் இந்த மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர். ஆபத்தான நிலையில் விபத்து ஏற்படுத்தக் கூடிய இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் இதை கருத்தில் கொண்டு கூடிய விரைவில் சரி செய்து கொடுத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.