
கோவை சரவணம்பட்டி விருட்சம் யோகாலயா பயிற்சி மையத்தை சேர்ந்த எட்டு சிறுவர், சிறுமியர் யோகாவில் புதிய உலக சாதனை படைத்தனர்.
DCB வேர்ல்ட் ரெகார்டஸ் நிறுவனம் இந்த சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கியது.
கண்ணாடி பெட்டிக்குள் யோகா செய்வது மற்றும் எட்டு அடி உயர டவரில் ஏறி உலக சாதனை படைத்த சிறுவர் சிறுமிகள் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள விருட்சம் யோகாலாயாவில் பயிற்சி பெற்று வரும் எட்டு வயது முதல் பனிரெண்டு வயது வரையிலான ஆறு சிறுமிகள்,இரண்டு சிறுவர்கள் என எட்டு பேர் இணைந்து யோகாவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்..

வெவ்வேறு சாதனைகளாக நடைபெற்ற இந்த நிகழ்வில் டிசிபி உலகசாதனை சார்பாக முனைவர்.ஆ.சூரியா கலந்து கொண்டு ஆய்வு செய்தார் . முன்னதாக சம்யுத்தா என்ற சிறுமி ஒன்றரை அடி பரப்பளவு மற்றும் உயரம் கொண்ட தொட்டியில் லாவகமாக அமர்ந்தபடி கண்டபிடராசனா எனும் ஆசனத்தை தொடர்ந்து 12 நிமிடம் 36 விநாடிகள் செய்து அசத்தினார்..
தொடர்ந்து சிறுமிகள் சம்ரிதா,மேகா,அக்ஷரா,வர்ஷா,வேதா ஆகிய ஐந்து சிறுமிகளும் எட்டு அடி உயர டவரின் மீது ஏறி பூமாசனாம்,உஷ்டாரசனம், கோமுகாசனம்,கபோடாசனம்,மற்றும் வாமாதேவாசன என பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்…

இதே போல சிறுவர்கள் தஸ்வந்த்,மற்றும் அஸ்வந்த் ஆகியோர் டவரின் மீது ஏறி யோகாவை செய்தனர் யோவா யோகா அகாடமியின் இயக்குனர் சரவணன் ஆலோசனைப்படி எட்டு சிறுவர் சிறுமிகள் இணைந்து செய்த இந்நிகழ்வில் டி.சி.பி.உலக சாதனை பதிவாக பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விருட்சம் யோகாலாயா பயிற்சி மையத்தின் இயக்குனர்கள் ரூபிகா,பவ்யஸ்ரீ ஆகியோர் கூறுகையில் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கிய தொடர் பயிற்சிகள் வாயிலாக இந்த சாதனையை செய்ய முடிந்ததாக தெரிவித்தனர்…தொடர்ந்து சாதனையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
மேலும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர் .