June 8, 2025
வாடிப்பட்டியில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி

வாடிப்பட்டியில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி

வாடிப்பட்டி, ஜூன்.5-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கச்சைக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் அவர்களின் அறிவுறுரதலின் பேரில்,வாடிப்பட்டியில் உள்ள குவாலிட்டி கம்பெனியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கபட்டது. இதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு புகையிலை பற்றிய விழிப்புணர்வு மற்றும் புகையிலை பொருட்களுக்கு எதிராக உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இதில் மருத்துவ அலுவலர்கள் நாகா நவீனா, பூர்ணிமா,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ்,சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன்,பூபன் சக்கரவர்த்தி,புவனேஸ்வரன் மற்றும் சமூக நல பணியாளர் ரதிஸ் மற்றும்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.