June 8, 2025
தவெக இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா.

தவெக இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியார் அவர்களின் சொல்லுக்கிணங்க, பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மன்மதன் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் பரமக்குடி நகர் நிர்வாகிகளின் ஏற்பாட்டில், தமிழக வெற்றிக் கழக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த மண்ணை நேசித்து இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்து அஞ்சாமையுடன் மக்களுக்காக சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள். விடுதலைப் போராட்ட களத்தில் அவர்களது அவரது போர்குணம் போற்றுதலுக்கு உரியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் 135 வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், தோழர்கள்,தோழிகள் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.