
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விலையில்லா புத்தகங்கள் சீருடைகள் புத்தகப்பை ஆகிய வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர். ஜூன்.2.
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் சீருடைகள் புத்தகப்பை ஆகியவை வழங்கியவை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பூந்தமிழ்பாவை தலைமை வகித்தார். தமிழாசிரியை ரேவதி வரவேற்றுப் பேசினார். எம் எல் ஏ பூண்டி.கலைவாணன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் புத்தகப் பைகள் ஆகியவற்றை மாணவ மாணவிகளுக்கு வழங்கி கலெக்டர் மோகனச்சந்திரன் பேசியதாவது.
இந்த கல்வி ஆண்டில் கடந்த ஆண்டைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதம் அடைய வேண்டும் என சபதம் ஏற்று பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல பெயர் எடுத்துக் கொடுத்து அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என வாழ்த்தி பேசினார்.
திருவாரூர் மாவட்டத்தில் 1289 பள்ளிகளைச்சேர்ந்த 1,57,343 மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் சீருடை புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலச்சந்திரன், பேரூராட்சி தலைவி கலைச்செல்வி, துணைத்தலைவர் தளபதி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பட விளக்கம். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா பாட புத்தகங்கள் புத்தகப் பை சீருடைகள் ஆகியவற்றை கலெக்டர் மோகனச்சந்திரன் எம்எல்ஏ பூண்டி.கலைவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.