
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு வேண்டுகோள்.
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டில் தமிழகத்தில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் இரத்தம் சிந்தி பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழனின் தற்காப்பு கலை கராத்தே விளையாட்டுக்கு அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் அங்கீகாரத்தை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன,இந்திய ஒலிம்பிக் சங்கம் கராத்தே விளையாட்டில் ஊழல்கள்,வழக்குகள் இருப்பதால் அங்கீகாரத்தை ரத்த செய்து விட்டார்கள்
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் தமிழகத்தில் இருக்கும் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் அனைவரையும் பல ஆண்டுகளாக அங்கீகாரம் இருப்பதாக ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் (TSKA) தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் என்ற சங்கம்
தமிழகத்தில் இருக்கும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் இரண்டிலும் அங்கீகாரம் இருப்பதாக பல ஆண்டுகளாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும்,தேசிய அளவிலும்,சர்வதேச அளவிலும் தொடர்ந்து கராத்தே போட்டிகள் நடத்தி வீரர்களை ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் TSKA கராத்தே சங்கம்
தமிழனின் பாரம்பரிய கலை கராத்தே விளையாட்டில் ஊழல்கள் செய்து,கோடி கணக்கில் கொள்ளை அடித்து வருகின்ற TSKA கராத்தே சங்கத்தின் மீது உரிய விசாரணை நடத்திட வேண்டுமாய் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொளகின்றேன்.
சர்வதேச கராத்தே வீரர்
தனசேகரன்