
துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவிப்பு
மதுரை:
மதுரையிலிருந்து துபாய் செல்ல 178 பயணிகள் காத்திருந்தனர் துபாயிலிருந்து தினமும் மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12:00 மணி அளவில் விமானம் மதுரை வந்தடையும் . பின்னர், மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 12:30 மணிக்கு புறப்பட்டு மாலை 3 மணிக்கு துபாய்க்கு செல்வது வழக்கம் . இந்நிலையில், துபாயிலிருந்து மதுரைக்கு வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் காலை 12 மணிக்கு வருவது ரத்தாகி மீண்டும் மாலை 6 மணி என அறிவிக்கப்பட்டது. தற்போது, 8 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 மணி நேரம் தாமதம் எனும் அறிவிக்கப்பட்டதால், பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர் –
மதுரையில் இருந்து துபாய் செல்வதற்கு 178 பயணிகள் புறப்பட டிக்கெட்
எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஸ்பைஸ் ஜெட் விமானம் இரவு 8 மணிக்கு செல்லும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது 8 மணி நேரம் விமானம் தாமதம் என்பதால் எப்போது வரும் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.