
பட்டினி ஒழிப்பு தின உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
மதுரை:
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தானப்ப முதலி தெரு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

இது குறித்து, அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், உலக பட்டினி ஒழிப்பு தினம் முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. மேலும்,
உலகில் பட்டினியால் யாரும் கஷ்டப்படும் நிலை இல்லாமல் போக சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் சசிகுமார், பாலையா, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.