June 8, 2025
சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் வாழ்த்து.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவியர்கள் 12வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீதமும், பதினொன்றாம் வகுப்பு தேர்வில் 94 சதவீதமும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 84 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் கடந்த 2023 – 2024 ம் ஆண்டு கல்வி ஆண்டைக் காட்டிலும், 2024 – 2025 ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகமாகி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஷாலினி (558) யை தலைமையாசிரியர் பாண்டியன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.