
சரந்தாங்கியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அதிமுக மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அலங்காநல்லூர், மே :24.
அதிமுக மீட்பு குழு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆலோசனையின் பேரில்,
பாலமேடு அருகே சரந்தாங்கியில் உள்ள பெரும்பிடுக முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .
ஒன்றியச் செயலாளர் கல்லணை சேது சீனிவாசன் ஏற்பாட்டில், பாலமேடு நகர செயலாளர் இ.ப. சேகர் அவைத் தலைவர் அய்யாவு நாயக்கர், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்
செயலாளர் சத்திர வெள்ளாளப்பட்டி, நடராஜன் வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச்
செயலாளர் அய்யாவு செட்டியார் , பாலமேடு இளைஞரணி செயலாளர் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.