June 8, 2025
உத்தமபாளையம் அருகே அருள்மிகு அபிராமி அம்மை உடனுறை விக்கிரம பாண்டீஸ்வர முடையார் சிவாலயம் 3 ம்ஆண்டு வருடாபிஷேக விழா

உத்தமபாளையம் அருகே அருள்மிகு அபிராமி அம்மை உடனுறை விக்கிரம பாண்டீஸ்வர முடையார் சிவாலயம் 3 ம்ஆண்டு வருடாபிஷேக விழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மார்க்கையன் கோட்டை அருள்மிகு அபிராமி அம்மை உடனுறை விக்ரம பாண்டீஸ்வரமுடையார் சிவாலயம் 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. 3ம் ஆண்டு வருட அபிஷேக விழாவினை முன்னிட்டு சிறப்பு யாகசாலை வேள்வி, தேர் ஊர்வலம், கலசப் புறப்பாடு, மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

சைவ சமய சிவாலய திருப்பணி வித்தகர் எஜமான் பாண்டி முனீஸ்வரர் அவர்களால் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சிவனடியார்கள்,பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முதல் நாள் நிகழ்வில் யாகசாலை, அருள்மிகு அபிராமி அம்மை விக்கிரமா பாண்டீஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் மகா சனி பிரதோஷ பூஜை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சிவ கார்த்திக்காமு மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.