
சோழவந்தான் அருகே காடுபட்டி காளியம்மன் மாரியம்மன் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் முப்பெரும் கரகம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
சோழவந்தான்,மே.21-
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகா அம்மன், காளியம்மன், மாரியம்மன் ஆகிய முப்பெரும் தேவியின் முப்பெரும் கரகம் எடுக்கும் திருவிழா 5 நாட்கள் நடைபெறும். இதில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருவிழா காப்பு கட்டுதல் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை காளியம்மன், மாரியம்மன் கரகம் எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு பக்தர்கள் எடுத்தனர்.

இன்று காலை மன்னாடி மங்கலம் வைகை ஆற்றில் இருந்து ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கரகம் எடுத்து வந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கத்தி போட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து மதியம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
மாலை சக்தி ரதி சேர்த்தல் நடைபெறும். நாளை காலை சேத்தாண்டி வேஷம் அதைத் தொடர்ந்து முப்பெரும் தேவியர்க்கு ஊர்வலமாக சென்று பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மதியம் நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்து கோவிலை வந்து அடைவார்கள். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் வீதி உலா நடைபெறும்.
நாளை மறுநாள் சனிக்கிழமை மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது. இவ்விழாவை காடுபட்டி தேவாங்கர் உறவின் முறை மற்றும் விழா கமிட்டியார்கள், சௌடேஸ்வரி அம்மன் தேவாங்கர் சமூக அறக்கட்டளை, சௌடாம்பிகை இளைஞரணி மற்றும் மகளிர் அணி ஆகியோர் செய்திருந்தனர்.
முப்பெரும் தேவியரின் கரகம் எடுக்கும் பூசாரிகள், விழா கமிட்டி உறுப்பினர்கள், உறவின்முறை உணவு ஏற்பாட்டாளர்கள், உணவு கூட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவை முன்னிட்டு சௌடாம்பிகை இளைஞரணி சார்பாக மூன்று நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. தினசரி கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காடு பட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.