
அதிகார போதையில் பேரூராட்சி தலைவி. தன் மீதுள்ள தவறை மறைக்க கபட நாடகம் ஆடுகிறாரா?
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் கெங்குவார் பட்டி பேரூர் கழக செயலாளர் தமிழன் மற்றும் அவரது மகனும், தேனி மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஸ்டீபன் பரிந்துரையின் பெயரில் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் பேருராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றது முதல் தற்போது வரையிலான மூன்றாண்டு கால கட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நிர்வாக முறைகேடுகளுக்காக இவர் மீது உயர் நீதிமன்றம் வரை பல வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றது.
தனது கணவரும் ஆசிரியருமான சௌந்தர பாண்டியனின் தலையீடு கெங்குவார் பட்டி பேரூராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் இருந்து வந்துள்ளதாக தெரிகின்றது. கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச் செல்வியின் கணவர் அரசு பள்ளி ஆசிரியர் கெங்குவார்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் தலையீடு செய்தும், சக கவுன்சிலர்களை அவமறியாதையாக நடத்துவதும், அவர் சொல்லும் வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி பணிகள் செய்வது என்று பாரபட்சம் காட்டியுள்ளார். சிறப்பு அதிகாரி காலகட்டத்தில் ஒதுக்கிய பணிகளுக்கு பணி நிறைவு பெறாமல், பணிகளை பார்வையிடாமல், முறைகேடாக ஒப்பந்ததாரருக்கு பில் தொகையை வழங்கியதால் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் சக கவுன்சிலர் பொன்மணி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு தாக்கல் செய்து, வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது அதன் வழக்கு எண் WP (MD) NO 15590/2023
WP (MD) NO 28053/2024
WP (MD) NO 26280/2024
WP (MD) NO 30926/2024 ஆகும், கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வியின் கணவர் சௌந்தரபாண்டியன் பூலத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது அங்கு பள்ளியில் படித்த ராஜபாண்டியன் என்ற மாணவரை அவமானப்படுத்தியதற்காக அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .
மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் சௌந்தரபாண்டியன் மீது மாணவனின் பெற்றோர்கள் பகிரங்கமாக புகார் தெரிவித்தனர் . கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதி வளர்ச்சியில் தமது ஆளுமை திறனை செலுத்தாமல், பேரூராட்சி பகுதியில் மக்கள் நலத் திட்டங்களை சரிவர செயல்படுத்தாமல், பேரூராட்சி பணிகளை மந்த நிலையில் வைத்துள்ளதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், செய்யட்டும் ,நான் தான் இங்கு தலைவர். நான் சொல்வதைப் போல் நீங்கள் செயல்பட வேண்டும் என மன்ற உறுப்பினர்களுக்கு கட்டளை இட்டுள்ளதாகவும் தலைவி மீது பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தான் ஒரு பட்டியல் இனத்தவர் என்பதால், தமது பதவிக்கு ஆபத்து நேர்ந்தால் ஜாதிய போர்வைக்குள் ஒளிந்து கொள்ளலாம் என்று எண்ணிய தலைவி… தமிழ்ச்செல்வி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் 28. 5 .2025 அன்று இவை சம்மந்தமாக மன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
தமது தலைவர் பதவி பறி போய் விடுமோ என்ற அச்சத்தில் ,தற்பொழுது தனக்கு பின்னால் சதிச்செயல் செய்வது, தனக்கு எதிராக வேலை செய்வது கெங்குவார் பட்டி திமுக பேரூர் கழக செயலாளர் தமிழனின் மகன் ஸ்டீபன் என்பவர்தான் என்று ஒருதலை பட்சமாக தீர்மானித்து அவர் மீது சாதிய ரீதியில் புகார் கொடுத்துள்ளார்.அரசியலில் காழ்ப்புணர்ச்சி காரணமாக சாதிய ரீதியிலான அடையாளத்தை புகுத்தி வரும் பட்டியலின சமூகத்தை சார்ந்த கெங்குவார்பட்டி பேருராட்சி தலைவி தமிழ்ச் செல்வி தற்போது சாதிய வஸ்திரத்தை கையில் எடுத்து “தாம் அதிகார போதையில் இருப்பதை நிரூபணம் செய்துள்ளார்”. இவரது கபட நாடகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என பேரூர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சூளுரைத்துள்ளனர்.