July 28, 2025
வளர்பிறை பஞ்சமி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை.

வளர்பிறை பஞ்சமி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை.

மதுரை.

மதுரை மாவட்டத்தில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு,வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள வராஹி அம்மனுக்கு, பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள்,அர்ச்சணைகள் நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர் யாரைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், வராஹி அம்மனுக்கு ஹோமங்கள், அபிஷேகங்களை,மணிகண்டன் பட்டர் செய்தார்.
இதோ போல, மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் உள்ள வராஹி அம்மன் சன்னதியில், சண்டி ஹோமம், ருத்ர ஹோமங்கள் நடைபெற்றது.
கோயில் சிவாச்சாரியார், சிறப்பு ஹோமங்களையும், அர்ச்சணைகளை செய்தார்.

கோயில் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.