
பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசும் நீதிமன்றமும் சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகிறது சார்பு நீதிபதி கருத்தரங்கில் பேச்சு!
வாடிப்பட்டி, ஏப்:29.
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஒரு நிறுத்த மையம் சார்பாக வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத் திற்கான உலக தினத்தையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு வாடிப்பட்டியில் உள்ள தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா வில் நடந்தது.
இந்த கருத்தரங்கி ற்கு மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செயலாளர், சார்பு நீதிபதி
சரவண செந்தில்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த கருத்தரங்கு பணியிட பாதுகாப்பு சர்வதேச தினத்தை ஒட்டி நடத்தப்படுகிறது. ஒரு நிறுத்த மையம் மூலம் பெண்களை வன்கொடுமையில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும் காவலன் செயலிஉள்ளிட்ட அவசரகால அழைப்பு எண்கள் பற்றி விளக்கிக் பேசினார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 1998 விசாகா குழு நியமிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பின்2013ல் சட்ட வடிவம் கிடைக்கப்பட்டது.
அதன் பின், பணியிட பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்த இரண்டு கமிட்டிகள் உருவாக்கப்பட்டது. என்பது பற்றியும் அது செயல்படும் விதம் பற்றியும் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசும் நீதிமன்றமும் சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகிறது என்று விளக்கி பேசினார்.
இந்த கருத்தரங்கில் ஒரு நிறுத்த மைய ஒருங்கிணைப் பாளர்கள் டயானா புனித வள்ளி, ரம்யா, மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாந்தி, தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் ஜோதிமணி, வழக்கறிஞர்கள் உமாசங்கர், முத்துமணி ஆகியோர் பேசினர்.
இதில், வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திவ்யா, தலைமைக் காவலர் நாகலட்சுமி,
ஆலை மேலாளர் சீனிவாசன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி சீதா சுப்ரமணியன், வாடிப்பட்டி வட்ட சட்டபணிக்குழு வழக்கறிஞர்கள் விஜயகுமார், சீனிவாசன், அழகர்சாமி தயாநிதி
தங்கபாண்டி, அரவிந்த்ராம், செந்தூர்பாண்டி, நேதாஜி மற்றும் சட்ட தன்னார்வலர்கள் உள்பட
ஏராளமான பெண் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியினை, வழக்கறிஞர் செல்வகுமார் வரவேற்று தொகுத்து வழங்கினார். முடிவில் ,வழக்கறிஞர் ராமசாமி நன்றி கூறினார்.