
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு புவியை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கந்தர்வக்கோட்டை ஏப் 22.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டியல் நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் மரக்கன்று நட்டு புவியை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்து மரக்கன்றுகளை ஊன்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக புவி தினம் குறித்து பேசும்பொழுது
பூமியின் இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலகளவில் புவி தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான புவி தினம் இன்று உலகளாவிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் புவி தினத்தைக் கொண்டாட ஒன்றுகூடுகிறார்கள். இது நமக்குக் கிடைத்திருக்கும் அழகான கிரகத்தின் நினைவூட்டலாகவும் செயல்படுகிறது. புவி தினம் முதன்முதலில் 1970 இல் ஒரு சிறிய சுற்றுச்சூழல் இயக்கமாக கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இது நமக்குக் கிடைத்திருக்கும் அழகான கிரகத்தின் நினைவூட்டலாகவும் செயல்படுகிறது.
காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, மாசுபாடு மற்றும் காடழிப்பு போன்ற அதிகரித்து வரும் சவால்களுடன் பூமி தினத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நமது கிரகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபரும் ஒரு பங்கை வகிக்கிறார் என்பதை இது நினைவூட்டுகிறது.
உலகளாவிய புவி தினம் 2025 நமது சக்தி, நமது கிரகம்’ என்ற கருப்பொருளுடன் 55வது முறையாக கொண்டாடப்படுகிறது. புவியை பாதுகாக்க மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்கவும் பிறந்தநாள் களில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.