
கூடுறவுத்துறை அமைச்சர்.கே.ஆர்.பெரியகருப்பன். முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சிவகங்கை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், மொத்தம் ரூ.27.26 இலட்சம் மதிப்பீட்டிலான 03 முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரியூர் மற்றும் செவல்பட்டி ஊராட்சி பகுதிகளில், 03 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர், நல்லாட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சீரான வளர்ச்சியையும், சமூக நீதியையும், ஜனநாயகத்தையும் தனது குறிக்கோளாக கொண்டு மக்கள் பணியாற்றிய பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் , ஆக்கப்பூர்வமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பல்வேறு நலத்திட்டங்கள், பிற மாநிலங்கள் மட்டுமன்றி, பிற நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
அதில், கல்வி மற்றும் சுகாதாரம் தனது இரு கண்களாக கொண்டு, அதற்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சிவகங்கை மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களின் தேவைகள் அறிந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே, பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்டம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 இலட்சத்திலிருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.03.00 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற திட்டப்பணிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து, இன்றையதினம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஏரியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆபத்தாரணப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.09.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையும், அதே ஊராட்சிக்குட்பட்ட இ.வலையபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.09.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கமும், செவல்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.09.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையும் என ஆக மொத்தம் ரூ.27.26 இலட்சம் மதிப்பீட்டிலான 03 முடிவுற்ற வளர்ச்சித்திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஊராட்சிகளில், இன்னும் கூடுதல் தேவைகள் இருப்பின், என்னிடமோ அல்லது சம்மந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ எடுத்துரைப்பின், அக்கோரிக்கைகள் மீது அரசின் திட்டங்கள் வாயிலாகவோ அல்லது எனது சொந்த நிதியின் வாயிலாகவோ உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படும் என , கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கா.வானதி, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.