June 8, 2025
பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதருக்கும், நந்திகேஸ்வரர்க்கும் பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கைலாசநாதர் சுவாமி பக்தர்களால் பல்லாக்கில் கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். மேலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் தீபாரதனைகள் நடந்தது. பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.